districts

img

விஏஓ அலுவலக மேற்கூரை இடிந்து விழுந்தது

விக்கிரவாண்டி, ஜூலை 31-  விழுப்புரம் மாவட்டம், காணை அருகே கிராம நிர்வாக அலுவலகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது.  விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி, காணை ஒன்றியத்திற்குட்பட்ட கோனூர் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் செயல் பட்டு வருகிறது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கட்டிடம் முறை யாக பராமரிப்பு செய்யாததால் மிகவும் சேத மடைந்த நிலையில் காணப்பட்டது. மழைக் காலங்களில் கட்டிடத்திற்குள் தண்ணீர் ஒழுகும் என்பதால் அங்கு பணிபுரிந்து வரும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊழி யர்கள் அச்சத்துடனேயே பணியாற்றி வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும்  மழையின் காரணமாக கட்டிடம் மேலும் சேதமடைந்தது. இந்த சூழலில் கட்டிடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. அப்போது கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊழியர்கள்  வெளியே சென்றிருந்ததால் நல்வாய்ப்பாக எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. தற்போது இக்கட்டிடத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால் பணிகள் தடை படாமல் இருக்க உடனடியாக தற்காலி கமாக மாற்று கட்டிடத்தை தேர்வு செய்வ தோடு, விரைவில் புதிய அலுவலக கட்டிடம் கட்டித்தரவும் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.