districts

சென்னை முக்கிய செய்திகள்

சென்னை புளியந்தோப்பில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

சென்னை, ஜன. 1- சென்னை புளியந்தோப்பில் இன்று முதல்  ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்  செய்யப்பட உள்ளதாக சென்னை போக்கு வரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரி சலை குறைக்கவும், போக்குவரத்தை மேம்படுத்தவும் பல்வேறு பகுதிகளில் மேம்பாலப் பணிகள் மற்றும் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்காக  அவ்வப்போது சென்னையின் முக்கிய  பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்  செய்யப்படுவது வழக்கம். அதன் ஒருபகுதி யாக தற்போது புளியந்தோப்பு பகுதியில் மேம்பாலம் பணிகளுக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  சென்னை மாநகராட்சியும், ரயில்வே துறை யும் இணைந்து புளியந்தோப்பு டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலையில் மேம்பாலம் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இப்பணிக்காக போக்குவரத்து மாற்றங்கள் முன்மொழியப்பட்டு செவ்வாய்க்கிழமை (ஜன. 2) முதல் ஓராண்டுக்கு செயல்படுத்தப்படும் என்று அறிவுறுத்தப்படுகிறது. அதன்படி பெரம்பூர் மற்றும் வியாசர்பாடியில் இருந்து டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை, கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதை வழியாக புரசை வாக்கம் வரும் வாகனங்கள் ஒருவழிப் பாதையில் அனுமதிக்கப்படும். புரசை வாக்கம் டவுட்டனில் இருந்து பெரம்பூர், வியாசர்பாடி, மாதவரம் வழியாக டாக்டர்  அம்பேத்கர் கல்லூரி சாலையில் கணேசபுரம்  சுரங்கப்பாதை வழியாக வரும் வாகனங்கள்  டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை, ஸ்டீபன் சன் சாலை, பெரம்பூர் ஹை ரோடு தெற்கு,  முரசொலி மாறன் மேம்பாலம், பெரம்பூர் ரயில் நிலையம் சந்திப்பு வழியாக சென்று  இலக்கை அடையலாம்.எனவே வாகன  ஓட்டிகளும், பொதுமக்களும் இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைக்கு மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறவைகளை மீட்கும் பணி மேலும் ஒரு வாரம் நீடிக்கும்

சென்னை,ஜன.1- மிக்ஜம் புயல் காரண மாக பெய்த கனமழை யின் போது கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.  அப்போது மணலியில் உள்ள  ஆயில் நிறுவனத் தில் இருந்து வெளியேறிய எண்ணை கழிவு பக்கிங்காம்  கால்வாய் வழியாக கொசஸ் தலை ஆற்றில் கலந்து முகத்துவாரம் வழியாக  கடலில் பரவியது. மேலும் வெள்ளத்தின் போது வீடுகளிலும் படிந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த எண்ணை கழிவால் கொசஸ்தலை ஆறு மற்றும்  அலையாத்தி காடுகளில் உள்ள ஏராளமான பறவை களும் பாதிக்கப்பட்டன. அதன் இறக்கைகளில் எண்ணை படர்ந்து பறக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அதனை வனத்துறையினர் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் மீட்டு சிகிச்சை அளித்தனர். பறவைகளின் இறக்கைகளில் இருந்த எண்ணை ‘பிரஷ்’ மூலம்  அகற்றப்பட்டு விடுவிக்கப் பட்டன. பல பறவைகள் பாதிக்கப்பட்டு காட்டுப் பகுதி மற்றும் நீர்நிலையில் இருக்கலாம் என்று தெரிகி றது. இதையடுத்து கொசஸ் தலை ஆற்று பகுதியில் மேலும் ஒரு வாரத்திற்கு கண்காணிப்பு மற்றும் பறவைகள் மீட்பு பணிகள் நடைபெறும் என்று மீட்பு குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

மூக்கண்டப்பள்ளியில்  கஞ்சா விற்றவர்கள் கைது

கிருஷ்ணகிரி,ஜன.1- மூக்கண்டப்பள்ளி எம்ஜிஆர் நகர்,தேசிங்கு நகர், நத்தம் பகுதியில் வட மாநிலங்களில் இருந்து வந்து தொழிற்சாலைகள், உணவகங்கள் மற்றும் பல அலுவலகங்களிலும் மிகக் குறைந்த வருமானத்தில் ஒப்பந்த ஊழியர்கள், உதிரி தொழிலாளர்களாக பணியாற்றி வரும் இந்தி, பிற மொழிகள் பேசக்கூடியவர்கள் சிறிய வாடகை வீடுகளில் மிக அதிகமானவர்கள் குடியிருந்து வருகின்றனர். தொழிற்சாலைகள் நிறைந்த இப்பகுதியில் மட்டும் சுமார் 5000 பிற மாநில ஒப்பந்த உதவி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்த தொழிலாளர்கள் கஞ்சா, மது  குட்கா உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு அடிமையாகி வருவதாக தகவல் தெரிய வருகிறது. இந்நிலையில், அந்த பகுதியில் போதை ஒழிப்பு காவல்துறையினர் ஆய்வுக்கு சென்ற பரிசோதித்தனர். அப்போது ரூ. 10,000 மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்த கர்நாடகாவைச் சேர்ந்த சையது உசேன், சையத் மன்சூர் என்ற இருவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

வாலிபர் கைது

கிருஷ்ணகிரி, பர்கூர், குந்தாரப்பள்ளி பகுதிகளில் 7 வழக்கு களில் தொடர்பு டைய 27 வயது வாலிபர் டெண்டுல் கர் என்பவர் பல மாதங்க ளாக காவல்துறையி னர் தேடி வந்தனர்.  இந்நிலை யில், ஒரு வீட்டில் பதுங்கி இருந்ததை கண்டுபிடித்து காவல்துறையினர் கைது செய்தனர்.