districts

img

மின்கம்பம் உடைந்து விழுந்து நள்ளிரவு முழுவதும் மின்தடை

பொன்னேரி, பிப்.23- நிலக்கரி ஏற்றி வந்த லாரி மின்கம்பத்தில் மோதியது குறித்து  பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டில் உள்ள தனியார் நிலக்கரி கிடங்கில் இருந்து கும்மிடிபூண்டிக்கு செவ்வாய் கிழமை  இரவு நிலக்கரி ஏற்றிக் கொண்டு லாரி சென்றது. பொன்னேரி அடுத்த டி.வி.புரம் சாலையில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் மின் கம்பம் பாதியாக உடைந்து மின் கம்பிகளுடன் சரிந்து விழுந்தது. லாரி ஓட்டுநர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். மின்கம்பம் முறிந்து விழுந்ததால் அப்பகுதி முழுவதும் மின்  தடை ஏற்பட்டது. இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப் பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்த னர். தகவல் அறிந்ததும் பொன்னேரி மின் ஊழியர்கள் விரைந்து வந்து முறிந்து விழுந்த மின் கம்பத்தை சரி  செய்யும் பணியில் ஈடுபட்டனர். மின் கம்பிகள் உடனடியாக அகற்றப்பட்டன.