districts

தூய்மை பணியாளரை தாக்கியவர் கைது

பொன்னேரி,ஜூன் 14-

    பொன்னேரி தாயுமான் செட்டி தெருவை சேர்ந்தவர் பலராமன். செங்குன்றம் நாரவாரி குப்பத்தில் நகராட்சி தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார்.  

     இவர், பொன்னேரியில் உள்ள ஆண்கள்  மேல்நிலைப் பள்ளி அருகே நின்று கொண்டிருந்தபோது பொன்னேரி ஜீவா தெருவை சேர்ந்த சுதன்(26) என்பவர் அவரிடம் திடீரென தகராறில் ஈடுபட்டு தாக்கினார். இதில் தலையில் பலத்த காயம்  அடைந்த பலராமனுக்கு 3 தையல் போடப்பட்டது. இதுகுறித்து பொன்னேரி காவல்நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து சுதனை கைது செய்தனர்.