districts

img

முகவரி இல்லாமல் சென்னைக்கு வந்த பார்சல்!

சென்னை,செப்.9- சென்னையில் தொடர்ச்சியாக கெட்டுப்  போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு  வருகிறது. அந்த வகையில் கடந்த 20 நாட்க ளுக்கு முன்பு எழும்பூர் ரயில் நிலையத்தில் 1500 கிலோ கெட்டுப்போன ஆட்டு இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த பத்து நாட்களுக்கு முன்பு சைதாப்பேட்டை மார்க்கெட்டில் உள்ள ஆட்டிறைச்சி கடைகள்  மற்றும் குடோனில்  நடந்த சோதனையில் பாதுகாப்பற்ற முறையில் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த சுமார் 700 கிலோ ஆட்டுக்கால்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த வகையில், சென்ட்ரல் பார்சல் அலுவலகம் முழுக்க கடும் துர்நாற்றம் வீசி  உள்ளது. இதனை தொடர்ந்து உரிய அதிகாரி களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, வால்டாக்ஸ் சாலையில் உள்ள சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பார்சல் அலுவலகத்தில் தில்லியிலிருந்து கொண்டு வரப்பட்ட 1500 கிலோ கெட்டுப்போன மாட்டிறைச்சி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து செய்தியாளர்கள் சந்திப் பில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமார் தெரிவித்ததாவது:- கெட்டுப்போன ஆட்டிறைச்சி ஆட்டுக் கால், கெட்டுப் போன காளான்கள் போன்ற  பார்சல் ஆக வந்துள்ளது. கடந்த சனிக்கிழமை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மூலம் தில்லியில் சென்னைக்கு கெட்டுப் போன இறைச்சி வந்திருக்கிறது. அதில் அனுப்புநர், பெறுநர் குறித்த எந்த விவரமும் இல்லை.   இதற்கு ரயில்வே போலீசாரிடம்  உரிய  முறையில் பார்சல் பெற்று அனுப்பு மாறு வலியுறுத்தியுள்ளோம் என தெரி வித்தார். ஓட்டல் மற்றும் சிறு உணவகங்கள் கெட்டுப்போன இறைச்சியை வாங்குவதை தவிர்க்கும் நடவடிக்கைகள் உணவு பாது காப்பு துறை எடுக்கும் என தெரிவித்தார்.