வயலில் விழுந்த மர்ம பொருள்
திருவள்ளூர், அக்.8- திருத்தணி அடுத்த ஆர்.கே. பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட ஆதிவராகபுரம் கிராமத்தில் உள்ள வயல்வெளி பகுதியில் சனிக்கிழமையன்று வானத்தில் இருந்து மர்ம பொருள் ஒன்று கீழே விழுந்தது. பலூன் போன்று இருந்த அதன் அருகில் மர்ம பொருளிலிருந்து சிக்னல் வந்தபடி இருந்தது. மேலும் சிறிய அளவிலான பெட்டி ஒன்று இருந்ததை கண்டு கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த மர்ம பொருளில் ஒன்றிய அரசின் தேசிய வானிலை ஆய்வு மையம், சென்னை மீனம்பாக்கம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் தொலைபேசி எண்ணும் இருந்தது. அந்த எண்ணில் தொடர்பு கொண்டு அதிகாரிகள் விசாரித்தபோது அந்த அது வானிலை ஆராய்ச்சி மையத்தின் சார்பில் வானிலை ஆய்வுகளுக்கு அனுப்பப்பட்டது என்பது தெரியவந்தது. மீட்கப்பட்ட சிறிய பெட்டி பல்வேறு பகுதியில் வெப்பநிலை, வானிலை மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்ய உதவிகர மாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
துப்பாக்கி முனையில் ரவுடி கைது
சென்னை,அக்.8- சென்னை முகப்பேர், நொளம்பூர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி டேனியல் ராஜா. சமீபத்தில் காஞ்சிபுரத்தில் என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி விஷ்வாவின் நெருங்கிய நண்பராக டேனியல் ராஜா இருந்துள்ளார். விஷ்வாவின் சேர்ந்து பல்வேறு கொலை வழக்குகள் மற்றும் கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர் டேனியல் ராஜா காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தார். தொடர்ந்து குற்ற வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதனைத்தொடர்ந்து நீதிமன்றம் பிடிவாரண்ட் அளித்து உத்தரவிட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் டேனியல் ராஜாவை தேடி வந்தனர். திருமங்க லம் சரக உதவியாளர் வரதராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை காவலர்கள் தேடி வந்த நிலையில், கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தில் பதுங்கி இருந்த போது துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
மஞ்சள்நீர் கால்வாயில் குப்பை
காஞ்சிபுரம்,அக்.8- அருந்ததியர் பாளையம் பகுதியில் தேங்கிய மழைநீர் கால்வாய்க்கு மோட்டார் பம்பு மூலம் எடுத்து செல்வதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மஞ்சள் நீர் கால்வாயை பார்வையிட்டு அந்த பகுதியில் உள்ள மக்களிடம் குப்பைகளை வடிநீர் கால்வாய்களில் போட வேண்டும் என்று ஆட்சியர் கலைச்செல்வி கேட்டுக் கொண்டார். இதையடுத்து ரூ.2.5 லட்சத்தில் திருப்பருத்திகுன்றம் இரட்டை கால்வாய் தூர்வாரும் பணி, காஞ்சிபுரம் ஒன்றியம் தாமல் ஏரியில் ரூ.2.28 கோடி மதிப்பீட்டில் கரை பலப்படுத்தும் பணி, மதகு கட்டும் பணியையும் அவர் பார்வையிட்டார்.
மின்கம்பியில் உரசிய கிரேன்: லாரி உரிமையாளர் பலி
சென்னை, அக். 8- திருவொற்றியூர் அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (40). இவர் சொந்தமாக லாரி தொழில் செய்து வந்தார். அவர் சனிக்கிழமை மாலை தனது லாரியில் இரும்பு உருளைகளை ஏற்றிக்கொண்டு சாத்தாங்காடு ஸ்டீல் யார்டு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சென்றார். அங்கு கிரேன் உதவியுடன் உருளைகளை இறக்கும் போது, கிரேன் மேலே இருந்த மின்சாரக் கம்பியில் உரசி உள்ளது. அப்போது இரும்பு உருளையை பிடித்துக் கொண்டிருந்த லாரி உரிமையாளர் மாரிமுத்து மீது மின்சாரம் தாக்கி மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார்.
இஸ்ரேலில் சிக்கிய தமிழர்களை மீட்க உரிய நடவடிக்கை
சென்னை, அக்.8- இஸ்ரேலில் சிக்கிய தமிழர் களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் - பாலஸ்தீனத்தைச் சூழ்ந்துள்ள போர் மேகத்தால் பல நாடுகளும் தத்தம் மக்களுக்கு பயண எச்சரிக்கைகளை விடுத்து வருகிறது. ஒன்றிய அரசும் இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் அவசர தேவைக்கு 97235 256748 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அல்லது cons1.telaviv@mea.gov.in என்ற மின்னஞ்சலுக்கு தகவல் அனுப்பலாம் என்றும் அறிவித்தி ருக்கிறது. அமைச்சர் மஸ்தான் இந்நிலையில், இஸ்ரேலில் இருந்து தங்களை மீட்க வேண்டும் என இதுவரை அயலகத் தமிழர் நல வாரியத்தில் 18 பேர் தொடர்பு கொண்டு இருப்பதாகவும், அதில் கோவையைச் சேர்ந்த 3 மாண வர்களும் உள்ளதாகவும் வெளி நாடு வாழ் தமிழர்கள் நல வாரிய அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரி வித்துள்ளார். தற்போதைய நிலை யில், 18 பேரும் பாதுகாப்பாக இருப்ப தாகவும், அவர்களை மீட்க நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவ தாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இஸ்ரேலில் இருக்கும் தமிழர்கள் nrtchennai@tn.gov.in, என்ற nrtchenna.in@gmail.com மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள லாம் என்றும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். மேலும், +91-87602 48625, +91-99402 56444, +91-96000 23645 போன்ற தொடர்பு எண்களும் அறிவித்துள்ளார்.
மூன்று நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை,அக்.8- காற்று திசை வேக மாறுபாட்டின் காரணமாக தமிழ்நாட்டில் சில நாட்க ளாக பரவலாக மழை பொழிந்து வருகிறது. இந்த நிலையில் கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணா மலை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, தேனியில் திங்கட்கிழமை (அக்.9) கன மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அக்.11, 12 ஆகிய தேதிகளில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, தேனி உள்ளிட்ட 15 மாவட்டங்க ளில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத்து டன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசானது முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்களின் தாக்குதலை நிறுத்த வலியுறுத்தல்
சென்னை, அக்.8 - இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்கு தலை தடுத்து நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.அந்ததோணி விடுதத்தள்ள பத்திரிகை செய்தியில், நாகை மாவட்டம் கோடியக்கரை தென்கிழக்கு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த வேதாரண்யம் பகுதி மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி வலை ஜிபிஎஸ் கருவி உள்பட பொருள் களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். வேதாரண்யம் பகுதி வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த அஞ்சலை யம்மாள் என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற ஆறு.மணியன், ம.வேல்முரு கன், செ.சத்தியராஜ், கு.கோடிலிங்கம், ஆறு காட்டுத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற ஆனந்தன், சுப்பிரமணியன், சசிகுமார், சரத்குமார், மற்றொரு படகில் சென்ற சிவகுமார், சின்னதம்பி, பழனி வேல், சின்னையன் ஆகியோரை இலங்கை கடற்கொள்ளையர்கள் கடுமை யாக தாக்கியுள்ளனர். பலத்த காயத்து டன் மீனவர்கள் நாகை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அண்மை காலமாக மீனவர்களை தாக்கி பொருட்களை கொள்ளையடிப்பது அதிகரித்து வருகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். ஒன்றிய அரசும், தமிழக அரசும் போர்க்கால அடிப்படையில் தலையிட்டு சர்வதேச காவல்துறை (இண்டர்போல்) உதவியுடன் கடற்கொள்ளையர்களை கைது செய்து தண்டிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
273 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு: சுகாதாரத்துறை தகவல்
சென்னை, அக்.8- தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 273 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 4 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளனர். தற்போது 503 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்தில் அளிக்க வேண்டும் என்று அரசு, தனியார் ஆய்வகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நாள்தோறும் 30 பேர் வரையில் பாதிக்கப்படுகின்றனர். இதனால், அனைத்து அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்தில் அளிக்க வேண்டும் என்று அனைத்து அரசு, தனியார் ஆய்வகங்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருக்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள 1,830 ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமப்புற சுகாதார நிலையங்களை ஒருங்கிணைத்து பரிசோதனை கருவிகளை அரசு வழங்கியுள்ளது. 23,000 மருத்துவ பணியாளர்கள் டெங்கு தடுப்பு சிறப்பு பணியில் ஈடுபடுத்தி இருக்கிறோம். இவ்வாறு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.