districts

img

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், தனியார்மயம், ஒப்பந்த முறையை கைவிட வேண்டும்

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், தனியார்மயம், ஒப்பந்த முறையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று (மே 15) சிந்தாதிரிப்பேட்டையில் அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் சிறப்பு மாநாடு நடைபெற்றது.  சங்கத்தின் தலைவர் ஆர்.துரை தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் கே.ஆறுமுகநயினார், துணைத் தலைவர்கள் ஏ.பி.அன்பழகன், எம்.சந்திரன், அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வி.தயானந்தம், பொருளாளர் ஏ.ஆர்.பாலாஜி உள்ளிட்டோர் பேசினர்.