districts

img

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 70 வயது ஆனவர்களுக்கு கூடுதல் பென்சன் வழங்க வேண்டும்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 70 வயது ஆனவர்களுக்கு கூடுதல் பென்சன் வழங்க வேண்டும், சத்துணவு   அங்கன்வாடி ஊழியர்களுக்கு  குறைந்தபட்ச ஊதியம்  ரூ7850 வழங்கிட வேண்டும்  என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  அரசு அனைத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில்  மாவட்ட துணைத் தலைவர் எஸ்.கே.சண்முகசுந்தரம் தலைமையில்  தர்ணா போராட்டம் நடைபெற்றது. ராணிப்பேட்டை, கடலூர், வேலூரில் தர்ணா நடைபெற்றது. வேலூரில் மாநில பொதுச் செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்து பேசினார். செங்கல்பட்டில் கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் பி.பன்னீர்செல்வம், பள்ளி கல்வி ஓய்வூதியர் சங்க நிர்வாகி மூர்த்தி, அஞ்சல் துறை நிர்வாகி அருணாசலம், மின்துறை சங்க நிர்வாகி எம்.குணசேகரன், போக்குவரத்து சங்க நிர்வாகி வெங்கடேசன் உள்ளிட்ட பலர் பேசினர். போராட்டத்தை நிறைவு செய்து அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில பொருளாளர் என்.இளங்கோ பேசினார்.