சிதம்பரம், பிப். 18- கடலூர் மாவட்டத்தில் டெல்டா பகுதி கள் காட்டுமன்னார்கோயில், சிதம்பரம், புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம் மற்றும் குறிஞ்சிப் பாடி தாலுகா பகுதிகளில் மொத்தம் 814 எண்ணிக்கையிலான பாசன மற்றும் வடி கால் வாய்க்கால்கள் மொத்தம் 2530 கி.மீ தூரத்திற்கு பயன்பாட்டில் உள்ளன. இவை அனைத்தும் நீர்வளத் துறை யினரால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த வாய்க்கால்கள் மூலம் மொத்தம் 1,33,552 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறு கின்றன. ஆண்டுதோறும் இந்த வாய்க்கால்கள் அனைத்தும் தமிழ்நாடு முதல்வரால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெல்டா சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் 158 வாய்க்கால்கள் மற்றும் வடிகால்கள் 796 கி.மீ தூரம் ரூ 15 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் படுவதற்கான அரசாணை பிறப்பிக்கப் பட்டது. இந்த பணிகள் அனைத்தும் ஜூன் 12ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டி யுள்ளது. இதையடுத்து சிதம்பரம் வட்டம் 12 கிலோ மீட்டர் தூரமுள்ள தவத்தான் பட்டு- வையூர் வாய்க்கால் ரூ. 14 லட்சத்திலும், 16 கிலோ மீட்டர் தூரத்திற்கு காட்டு கூடலூர் வாய்க்கால் ரூ. 18 லட்சத்திலும் தூர்வாரும் பணிகள் நடைபெறுகிறது. இந்த பணியை பிப்.17 அன்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். அப்போது, தூர்வாரப்படும் இந்த வாய்க்கால் மூலம் 1 லட்சத்து 33 ஆயி ரத்து 522 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு கடைமடை வரை தண்ணீர் கொண்டு செல்ல வழி வகை செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.