districts

img

குடியிருப்புக்கு அருகாமையில் ரேசன் பெற்றுக் கொள்ள அனுமதி

சென்னை, டிச. 23 - துறைமுகம் பகுதி 56ஆவது வட்டத்தில் செயல்பட்டு வந்த நியாய விலைக்கடை 55ஆவது வட்டத்திற்கு மாற்றப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்தை அடுத்து குடியிருப்புகளுக்கு அருகாமையில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொருட்களை பெற்றுக் கொள்ள லாம் என துணை ஆணையர் தெரிவித் துள்ளார். 56ஆவது வட்டம், ராமசாமி தெருவில் 2986  குடும்ப அட்டைகளுடன் 3 நியாய விலை கடைகள் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்தன. 55ஆவது வட்டம், நாட்டுப் பிள்ளை யார் கோவில் தெருவில் புதிதாக கட்டப் பட்ட கட்டிடத்திற்கு இந்த கடைகள் மாற்றப் பட்டன. குடியிருப்புகளுக்கு அருகில் இருந்த கடைகள், சுமார் 2.5 கி.மீ தூரத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். எனவே, குடியிருப்புக்கு அருகாமையில் நியாய விலை கடை அமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த கோரிக்கை மனுவை உணவு வழங்கல்  மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை துணை ஆணையரிடம் மனு அளிக்கும் போராட்டம் புதனன்று (டிச.22) நடைபெற்றது. இந்தப் போராட்டத்தை அடுத்து உதவி ஆணையர் சங்கீதா, நேரடியாக வந்து  தலைவர்களிடம் மனுவை பெற்றுக் கொண்டு பேசினார். மக்கள் குடியிருக்கும் இடங்களுக்கு அருகாமையில் உள்ள பிடாரியார் கோவில் தெரு, பவளக்கார தெரு ஆகிய இடங்களில் உள்ள நியாய விலைக் கடைகளில் தற்காலிகமாக பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று  அறிவித்தார். இந்தப் போராட்டத்திற்கு கட்சியின் துறை முகம் பகுதிச் செயலாளர் எம்.ஜலாலுதீன் தலைமை தாங்கினார். மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு  உறுப்பினர் ஆர்.முரளி, மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆர்.அருள்குமார், எஸ்.மஞ்சுளா, வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எம்.வி. கிருஷ்ணன் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.