districts

img

திருவொற்றியூர் அரசுக் கல்லூரிக்கு புதிய கட்டிடம்  கட்டித் தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

திருவொற்றியூர் அரசுக் கல்லூரிக்கு புதிய கட்டிடம்  கட்டித் தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது. இதையடுத்து, பேருந்து நிலையம் அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் 2 ஏக்கரில் ரூ. 16 கோடி மதிப்பீட்டில் 18 வகுப்பறைகள், நூலகங்கள், ஆய்வகம், அலுவலகங்கள் கட்ட முடிவெடுக்கப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை (மார்ச் 16) காலையில் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். இதில் கல்லூரி முதல்வர் விஜயா, மாமன்ற உறுப்பினர் கே.பி.சொக்கலிங்கம், மதன்குமார், ராமநாதன், எஸ்.டி.சங்கர், முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.