கடலூர், மே 16-
தீவளூர் கிராமத்தில் உள்ள ராம்கோ நிறுவனம் கையகப்படுத்திய நிலத்தில் நிறுவனம் தொடங்கும் வரை விவசாயிகள் பயிரிட அனு மதிக்க வேண்டும் என்று கடலூர் ஆட்சி யரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், செயற்குழு உறுப்பினர் என்.எஸ். அசோகன், நிர்வாகிகள் கலைச்செல்வன், வாசுதேவன் உள்ளிட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சி யிரிடம் அளித்துள்ள மனுவில் கூறி யிருப்பதாவது:
தீவளூர் கிராமத்தில் 400 குடும்பங்கள் வசிக்கின்றன. 1000 ஏக்கர் நன்செய் நிலம் உள்ளது. 300 ஏக்கரில் ஏரி அமைத்துள்ளது. 99 விழுக்காடு குடும்பங்கள் உழவு தொழில் செய்து வருகின்றனர். நெல் பயிர் விவசாயம் மட்டுமே அந்த கிராமத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளாக ராம்கோ நிறுவனம் தீவளூர் மக்களின் நிலங்களை விலைக்கு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். நிலத்தை வாங்கும் போது, நிலம் கொடுத்த வர்கள் வீட்ட்டில் ஒருவருக்கு வேலை தருகிறோம். கிராம மக்களின் விவசாய வாழ்வாதாரத்திற்கு எந்த பாதிப்பும் வராது என்றும், நாங்கள் எப்போது உங்கள் நிலத்தில் சிமெண்ட் கல் எடுக்க வருகிறோமோ, அப்போது நிலத்தை ஒப்படைத்தால் போதுமானது, அதுவரை, நீங்களே பயிர் செய்து கொள்ளலாம் என்று உத்திரவாதம் கொடுத்து நிலத்தை ராம்கோ நிறுவனம் வாங்கியது. அதனை ஏற்று மக்கள் சிலர் ராம்கோ நிறுவனத்திடம் தங்கள் நிலங்களை விற்றார்கள்.
அதனை தொடர்ந்து நிலத்தை விற்ற வர்களும், ஏற்கனவே குத்தகைக்கு நிலத்தில் பயிர் செய்தவர்களும் சென்ற ஆண்டு வரை பயிர் செய்து வந்தனர். இந்த ஆண்டு 2023 ராம்கோ நிறுவனம் திடீரென எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், பயிர் செய்த நிலங்களில் உள்ள வரப்புகளை உடைத்து, நிரவி பயிர் செய்வதை தடுத்துள்ளது.
இதனால் உழவுத்தொழில் செய்த மக்கள் பெரும் பாதிப்புக் குள்ளாகி உள்ளார்கள். மக்க ளின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக் குறியாக மாறியுள்ளது. குத்தகைக்கு பயிர் வைத்தவர்கள் உட்பட, தங்கள் பிள்ளைகளை இதனை சார்ந்து படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே ராம்கோ நிறுவனம் தம் தொழில் நிறுவனத்தை தீவளூரில் தொடங்கும் வரை விவசாயத் தொழிலை தொடர அனுமதிக்க ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.