கள்ளக்குறிச்சி, அக்.1 – கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை வட்டத்தில் உள்ள கிளியூர் பட்டிய லின மக்களின் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. இதை கிராம கணக்கில் பதிவு செய்யவில்லை. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளை சந்தித்து நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மா.குன்னத்தூர் கிராமத்தில் ஆதிதிராவிட நலத்துறை மூலம் வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாவை கிராம கணக்கில் பதிவு செய்யக் கோரியும் பூவனூர் கிராமத்தில் கிராம நத்தத்தில் குடியிருக்கும் மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வலியுறுத்தியும் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலு வலகம் முன்பு ஒன்றியச் செயலாளர் ஆர்.சீனுவாசன் தலைமையில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.கே. பூவராகன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் எம்.குன்னத்தூர் பி.தணிகாசலம், கிளியூர் கே.சக்கரவர்த்தி, சங்கர், பூவனூர் சீனிவாசன்,கலைச் செல்வி, வே.பால கிருஷ்ணன், குன்னத்தூர் கிளைச் செய லாளர்கள் பி.ஹரி, மஞ்சுநாதன் மற்றும் 100க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தின் போது உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலு வலகம் முன்பு மதிய உணவு தயார் செய்த னர். இதைத் தொடர்ந்து, வட்டாட்சியர் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, பூவனூர் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு உடனடியாக வீட்டு மனை பட்டாவை வட்டாட்சியர் வழங்கினார். மேலும் கிளியூர் கிராமத்தில் வகை மாற்றம் செய்யப்பட்ட பட்டாவை விசார ணையின் அடிப்படையில் ஒரு வார காலத்திற்குள் வழங்கப்படும் என உறுதி அளித்தார். மா.குன்னத்தூரில் ஒரு வார காலத்திற்குள் பட்டா வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.