districts

img

இருளர் மக்களுக்கு சாதிச்சான்று வழங்க மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை

கிருஷ்ணகிரி, மே 9- தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் சூளகிரியில் வட்டத் தலைவர் குண்டப்பா தலைமையில் நடை பெற்ற சிறப்பு பேரவைக் கூட்டத்தை மாநில துணைத் தலைவர் ஏ.வி.சண்முகம் துவக்கி வைத்தார். இதில் கலந்து கொண்டு மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு சிறப்புரையாற்றினார். முன்னதாக பி.டில்லிபாபு செய்தி யாளர்களிடம் கூறுகையில், மலைகள், வனங்கள் நிறைந்த இங்கு 13,000 மலைவாழ் பழங்குடி இருளர் மக்களை அரசு மற்றும் வனத்துறையினரால் விலங்குகளுக்கும் கீழாகவே நடத்தப்படுகின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிக் கொடுக்கப்பட்ட 1000 தொகுப்பு வீடுகள் முற்றிலும் சிதிலமடைந்துள்ளது. சுமார் 9,000 பேருக்கு குடியிருக்க வீடுகள் இல்லை. 95 விழுக்காடு மக்க ளுக்கும், குறிப்பாக பள்ளி செல்லும் வயது குழந்தைகளுக்கும் சாதிச் சான்றுகள் வழங்க மறுத்து வருகின்றனர். 20 ஆண்டுகள் கடந்தும் அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகளுக்கு பட்டா வழங்கப்படவில்லை. சிதிலமடைந்த வீடுகளை உடனே சீர்படுத்தி, அவர்களுக்கு  பட்டா வழங்க வேண்டும், வீடு இல்லாதவர்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும், சாதி சான்றுகளை உடனே வழங்க வேண்டும். இல்லையென்றால் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 7ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடு வோம் என டில்லிபாபு கூறினார். இதில் துணைத் தலைவர் முரளி, நிர்வாகி ராஜேந்திரன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ், தலைவர் முருகேஷ், துணைத் தலைவர் கிருஷ்ண தேவராஜ், மாதர் சங்க மாவட்டத் தலைவர் சரஸ்வதி, சிபிஎம் வட்டச் செயலாளர் எஸ்.முனியப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.