சட்டக் கல்லூரி மாணவரை தாக்கிய காவலர்கள் மீது வழக்கு பதிய வேண்டும், பொய் வழக்கை திரும்ப பெறவேண்டும் என வலியுறுத்தி செவ்வாயன்று (ஜன 18) கொடுங்கையூர் காவல் நிலையம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் வட சென்னை மாவட்டத் தலைவர் காவியா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் நிதீஷ், நிர்வாகிகள் அகல்யா, ரோஸ்மேரி, குணா, கிஷோர், போயஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் நிறைவாக மாணவர் சங்க தலைவர்கள், காவல்துறை துணைஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.