தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பட்டமளித்த விழாவில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அரவிந்தசாமியை பாதுகாப்பு எனக் கூறி கைது செய்த காவல் துறையைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு துணை தலைவர் சுமித்ரா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைச் செயலாளர் மு.தமிழ்பாரதி, மாவட்டச் செயலாளர் ஆ.அரிகிருஷ்ணன், துணைத் தலைவர் ஹரிஷ்குமார், மாவட்டக் குழு உறுப்பினர் மதுமிதா, வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.பிரகாஷ் ஆகியோர் பேசினர்.