districts

ஆளுநருக்கு அதிகாரம் இல்லை!

 சென்னை,அக்.19- “தமிழ்ப் பல்கலைக்கழக சட்டம் 1982ல் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதாவை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு  தாக்கல் செய்தார். அதில், வேந்தர் (ஆளுநர்)  என்ற சொல்லுக்கு பதிலாக அரசு என்ற  வார்த்தை சேர்க்கப்பட வேண்டும். குஜராத்,  தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்க ளில் மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமனம் செய்வ தற்கு அரசுக்கு அதிகாரம் வழங்க முடிவு செய்தது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 12 பல்கலைக்கழகங்களின் சட்டங்களை திருத்தம் செய்வதற்காக கடந்த ஏப்ரல் 25ஆம்  தேதியன்று சட்டசபையில் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அதுபோல தமிழ்ப் பல்கலைக்கழக சட்டம் 1982ல் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது” என கூறப்பட்டிருந்தது. மேலும் மூன்று சட்ட மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப் பட்டது.