நாகர்கோவில், மார்ச் 4- தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரி அலுவலர் சங்க 18 வது மாநில மாநாடும் சங்கத்தின் 50-வது ஆண்டு பொன்விழாவும் கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரம் விவே கானந்தா கல்லூரியில் நடைபெற்றது. மார்ச் 2 ,3 ஆகிய தேதிகளில் மாநாடு நடைபெற்றது. முதல் நாள் மாலையில் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இரண்டாவது நாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணிக்கு மாநாட்டு அமைப்பாளர் எஸ்.பி.கணேசன் தலை மை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர் கிறிஸ்டோபர் துவக்கி வைத் தார். இதைத்தொடர்ந்து மாநிலத் துணைத் தலைவர் சுப்ரமணியன் தலை மையில் முன்னாள் மாநிலத் தலைவர் இன்பநாதன் கொடியேற்றி வைத்தார்.இதைத்தொடர்ந்து தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.பின்னர் அரங்கில் பொது மாநாடு நடை பெற்றது. இம்மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் எல்.எம்.ஒய். ஏஜாஸ் தலை மை தாங்கினார் .குமார், மோக னன் ஆகியோர் முன்னிலை வகித்த னர். மாநாட்டு அமைப்பாளர் வை. கோபிநாத் வரவேற்புரையாற்றினார். முன்னாள் பொதுச் செயலாளர் சுப்பிர மணியன் துவக்கவுரையாற்றினார். தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் மு. அப்பாவு விழா பேருரையாற்றி னார். மகா குரு சன்னிதானம் பாலபிர ஜாபதி அடிகளார், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், விவேகானந்தா கல்லூரி செய லாளர் ராஜன், அகில இந்திய தலை வர் ஆர். பி. சிங், தேசிய தலைவர் நாகராஜன், மாநில ஒருங்கிணைப்பா ளர் காந்தி ராஜன், முனைவர் சுரேஷ், மாநில இணை பொதுச் செயலாளர் ராமலிங்கம், குமரி மாவட்டச் செயலா ளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மலர் வெளியீடு இதைத்தொடர்ந்து மலர் வெளி யீட்டு விழா நடைபெற்றது. மலர் இணை ஆசிரியர் தங்கவேல் முன்னிலை வகித்தார். மலர் ஆசிரியர் முனைவர் கு. விஜயன் மலரை வெளியிட்டார். மல ரைப் பெற்றுக் கொண்டு நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ஆர். மகேஷ் உரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் ஆ. செல்வம் நிறைவுரை யாற்றினார். மாநில பொருளாளர் ராஜகுமார் நன்றி கூறினார். தீர்மானங்கள் இந்திய ஒன்றியத்தில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல் படுத்தப்பட்டு வருகின்றது. கர்நாடக மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பேற்று 8 மாதங்கள் ஆன நிலையில் தனது தேர்தல் வாக்குறுதியை நிறை வேற்றும் வகையில் பழைய ஓய்வூதி யத் திட்டத்தை கர்நாடக அரசு மீண்டும் அமல்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசும் புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் .
தமிழ்நாடு முழுவதும் ஏழை எளிய மாணவர்களுக்கு கட்டணமின்றியும் குறைந்த கட்டணத்திலும் உயர் கல்வி யை வழங்க அரசு உதவி பெறும் கல்லூரிகளின் பங்கு இன்றியமையாத தாகும். மக்கள் வரிப்பணமான அரசு நிதியிலே உருவாக்கப்பட்ட உதவி பெறும் கல்லூரிகளை நிகர்நிலை பல் கலைக்கழகமாக மாற்றம் செய்தால் சேவை அடிப்படையில் உயர்கல்வி பாதிக்கப்பட்டு முற்றிலும் வணிக மயமான கல்வியாக மாறிவிடும். ஏழை மாணவர்களுக்கு கல்வி எட்டாக்கனி யாக மாறிவிடும். எனவே அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியார் நிகர் நிலை பல்கலைக்கழகமாக்குகின்ற முயற்சியினை அரசு கைவிட வேண்டும். தமிழ்நாடு முழுவதும் உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள இளங்கலை - முதுகலை பாடப்பிரிவுகளுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை தவிர கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்காணித்து, கூடுதலாக வசூலிக்கும் கல்லூரிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறுதீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. சபாநாயகர் உறுதி சபாநாயகர் அப்பாவு பேசும் போது, “பெண் கல்விக்கு தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் வழங்கி வரு கிறது. ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்திய போது கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த வர்கள் ஒரு முறை கூட ஜாக்டோ - ஜியோ அமைப்பினருடன் அவர்களுடைய பிரச்சனைகளை பேச அழைக்க வில்லை. ஆனால் தற்போதைய அரசு அழைத்துப் பேசியிருக்கிறது. எனவே நிதிநிலையைக் கணக்கில் கொண்டு ஜாக்டோ - ஜியோவின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படும், நடைமுறைப்படுத்தப்படும்” என்றார்.