districts

img

தடைகாலம் முடிந்ததால் மீன்பிடிக்க கடலுக்குள் சென்ற மீனவர்

கடலூர், ஜூன் 15-

     தமிழ்நாட்டில் 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் முடி வுக்கு வந்துள்ளதால், மீன வர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் மீன்களின் இனப்பெருக்க கால மான ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 15 ஆம் தேதி வரை விசைப் படகுகளில் சென்று ஆழ்கடலில் மீன்பிடிக்க தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்து வருகிறது.

   அதன்படி கடலூர் மாவட் டத்தில் 267 இயந்திரம் பொருத்தப்பட்ட விசைப்படகு களும், 3,763 இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகு களும் இந்த மீன்பிடி தடை காலத்தில் மீன்பிடிக்க செல்லா மல் கரையில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன. தடை காலத்தை பயன்படுத்தி, மீனவர்கள் தங்கள் படகுகளையும், வலை களையும் சீரமைக்கும் பணி யில் ஈடுபட்டனர்.

    கடலூர் துறைமுகத்தில் மீன வர்கள் தங்கள் வலைகளில் உள்ள கிழிந்த மற்றும் சேத மடைந்த பகுதிகளை சீர மைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

     மேலும் படகுகளில் ஏற்பட்டி ருந்த பழுதுகள் மற்றும் உதிரி பாகங்களை மாற்றும் பணி யிலும் ஈடுபட்டனர். இதையடுத்து மீனவர்கள் தங்கள் படகுகளுக்கு வர்ணம் பூசி மீன்பிடிக்க செல்ல தயாராக இருந்தனர். மீன்பிடி தடைகாலம் முடி வுக்கு வந்ததால் கடலூர் துறை முகம், பரங்கிப்பேட்டை, அன்னங் கோவில், தாழங்குடா, அய்யம் பேட்டை உள்ளிட்ட மீனவ கிராங் களை சேர்ந்த மீனவர்கள் தங்கள் படகுகளுடன் ஆழ் கடலில் மீன்பிடிக்க சென்றனர்.  

    இதற்காக ஏற்கெனவே தங்கள் படகுகளில் தேவையான உணவுப் பொருட்கள், குடிநீர், டீசல் மற்றும் ஐஸ் கட்டி களை ஏற்கெனவே தயார் நிலை யில் வைத்திருந்தனர்.இவர்கள் தங்கள் படகுக ளுக்கு படையலிட்டு, வணங்கி மீன்பிடிக்க சென்றனர்.