districts

img

கால்கள் அழுகிய பெண் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

திருவள்ளூர், ஜன 25- மீஞ்சூரை அடுத்த கல்பாக்கம் ஊராட்சியின் அலட்சிய போக்கால் தூய்மை காவலராக பணி யாற்றி வந்த லலிதா மரண மடைந்தார். பணியின் போது  இறந்ததால் அவரது குடும் பத்தினருக்கு  அரசு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என சிஐடியு வலியுறுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றி யம் கல்பாக்கம்  ஊராட்சி யில்  தூய்மை காவலராக பணிபுரிந்து வந்தவர் லலிதா  (53). கடந்த டிசம்பர்  மாதம் 30 ஆம் தேதி ஊராட்சி முழுவதுமாக கை,  கால் ஆகியவற்றிக்கு எந்தவித பாதுகாப்பு கவச மும் இல்லாமல்  ப்ளீச்சிங் பவுடர் தெளித்ததால்,  இடது கால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக அழுகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த கொடுமையை கண்ட அவரது கணவர் மனமுடைந்து  உயிரி ழந்தார். கணவர் இறந்த போது அருகில் அமர்ந்து அழுது தனது துக்கத்தை வெளிப்படுத்த முடியாத நிலையில் வேதனையில் இருந்தார். அதன் பிறகு திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தினர் (சிஐடியு ),  அரசும் , மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு லலிதாவுக்கு  அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.  பின்னர் தீக்கதிர் நாளி தழில் இது குறித்து செய்தி வெளிவந்த நிலையில்,  தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டு கழ கத்தின்  (தாட்கோ), நல வாரிய  உறுப்பினர்  ஹரிஷ்  குமார் நேரடியாக வந்து  சம்பந்தப்பட்ட தொழிலா ளிக்கு ஆறுதல் கூறினார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரும் தொலைபேசி மூலம் ஆறுதல் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு  மருத்துவமனையில் உள்நோயாளியாக  அனு மதிக்கப்பட்டார். கடந்த ஒரு வார காலமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலை யில் ஜன 24 அன்று  சிகிச்சை பலனின்றி லலிதா காலமானார்.  தமிழ்நாடு அரசும், திருவள்ளூர் மாவட்ட ஆட்சி நிர்வாகம் மற்றும் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் உரிய முறை யில் தலையீடு செய்து உயிரிழந்த லலிதா குடும் பத்திற்கு ரூ.15 லட்சம் நிவார ணம் வழங்க வேண்டும்,  அவரது குடும்பத்தினருக்கு அரசு வேலையும் அளிக்க வேண்டும். தமிழ்நாடு ஆதிதிராவி டர் வீட்டுவசதி மேம்பாட்டு கழகத்தில் உள்ள தூய்மை  காவலர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ளதால்,  மேற்கண்ட தொழிலாளியின் குடும்பத்திற்கு பணி யின் போது இறந்ததால், நலவாரியத்திலிருந்து இழப்பீடு தொகையாக ரூ.5  லட்சம் உடனடியாக வழங்க வேண்டும்.எவ்வித  பணிக்கருவிகளும் வழங்கா மல் தூய்மை காவலரின் உயிர் போவதற்கு காரண மாயிருந்த கல்பாக்கம் ஊராட்சி மன்ற நிர்வாகத் தின் மீது மாவட்ட ஆட்சியர்  கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.கதிர் வேல், மாவட்டச் செயலா ளர் ஏ.ஜி.சந்தானம், பொரு ளாளர் ஏ.பழனி ஆகி யோர் வலியுறுத்தியுள்ளனர்.