districts

img

சுற்றுச்சூழல் என்பது வாழ்வாதாரமே! - எஸ்.ஜி.ரமேஷ்பாபு

”காவிரி தெண்பெண்ணை பாலாறு - தமிழ்
 கண்டதோர் வையை பொருனை நதி - என
மேவிய யாறு பலவோட - திரு
மேனி செழித்த தமிழ்நாடு”

என பாரதின் பாடலில் வரும் ஆறுகளில் காவிரியின் நீரும், தெண்பெண்ணையில் நீரும் பாய்ந்தோடுவது கடலூர் மாவட்டம் ஆகும். அதுமட்டுமல்ல கெடிலம் ஆறு,பரவனாறு,  வெள்ளாறு என பல ஆறுகள் கடலில்கலக்கும் இயற்கை சூழல் நிறைந்த மாவட்டம். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய திணை நிலங்கள் அமைந்த மகத்தான நில பிரதேசம். எனினும்  வளர்ச்சி என்ற பெயரில் கற்களை எடுக்க குறிஞ்சியும், இறால் பண்ணைகளை வளர்க்க முல்லையும், பிளாட் போட்டு பணம் பார்க்க மரு தமும், அனல் மின் நிலையங்களுக்காக நெய்தலும் அழிக்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு இயற்கை பேரிடரால் பாதிக்கப்படும் இம்மாவட்டத்தில் பெருவெள்ளம் கடும் பாதிப்பை உருவாக்கு கிறது. இத்தனை ஆறுகள் சங்கமிக்கும் இம்மாவட்டத்தில் வெள்ளம் வர எப்படி வாய்ப்பு ள்ளது என பலரும் வியக்கின்றனர்.ஆனால் வெளி உலகிற்கு தெரியாத ஒரு உண்மை உள்ளது. கடல் மட்டம் அருகில் மாவட்ட எல்லைகள் முழுவதும் செயற்கை மேடுகள் உருவாக்கப்பட் ்டுள்ளது. செயற்கை மேடுகளா? ஆம், கடலூரிலிருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் கிழக்கு திசையில் வரிசையாக சிப்காட் நிறுவனங்கள், உயர்ந்து நிற்கும் அதன் ஆலை சுவர்கள். அடுத்து சிப்காட்மூன்றாம் விரிவாக்கமாக பெரியபட்டு அருகில் சைமா சாயக்கழிவு நிறுவனம், 500 ஏக்கர் நிலங்களுக்கு மேல் செம்மண் கொட்டி மேடாக்கி உள்ளனர். கடலோரம் நாகார்ஜூனா எண்ணை சுத்திகரிப்பு ஆலை 2300 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்து வேலிபோட்டு வைத்துள்ளது.  20 ஆண்டுகளை கடந்தும் எந்த வேலைகளையும் துவங்கவில்லை. அடுத்து பரங்கிப்பேட்டை அருகில் ஐ.எல்.எப்.எஸ் அனல் மின் நிலையம் 2000 ஏக்கர் நிலத்தில் சுற்றுச் சுவர் கட்டி சுனாமி வந்தால் கூட கிராம மக்கள் தப்பித்து ஓடமுடியாத நிலை யை உருவாக்கி உள்ளது.

அதை கடந்தால் சிதம்பரம் கடலோரம் முழுவதும் அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக ஆயிரக்கணக்கான இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டு, ஏழு அடி உயரத்தில் குட்டைகள் அமைக்கப்பட்டு கரை தடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல உலக புகழ் பெற்ற  பிச்சாவரம் சதுப்பு நில காடுகளில் ரசாயன கழிவு நீரை கலந்து அந்த அற்புதத்தை பாழ்படுத்தியுள்ளனர். இப்படி கடலோரம் முழு வதும்  லாப வெறிக்காக உருவாக்கப்படும் செயற்கை மேடுகளால் இயற்கையாக கடலை நோக்கி ஓடி வரும் மழை நீரின் பாதைகள் தடுக்கப்படுவதால் வெள்ளமாய் உருமாறி மருத நிலத்தின் பயிர்களை அழிக்கிறது. வீடுக ளுக்குள் தஞ்சம் அடைகிறது.  தண்ணீர் வடிய பல நாட்கள் ஆவதால் பயிர்கள் அழுகி அழிவதும், நோய் தொற்று பரவுவதும் கடலூர் மாவட்டதின் தொடர்கதையாக மாறி உள்ளது.   கடற்கரையோரம் நடக்கும் மாறுதல்களால் நேரடியாக பாதிக்கப்படுவது மீனவ மக்களே. சிப்காட் நிறுவனங்களில் கழிவுகள், அனல் மின் நிலைய கொதி நீர் மற்றும் இறால் பண்ணை களில் ரசாயன கழிவுகள் நேரடியாக கடலில் கலப்பதால் கரையோரத்தில் மீன்கள்  கிடைப்பது மிகவும் குறைந்து போவதும், அதனால் அம்மக்க ளுக்குள் சண்டைகளும், சச்சரவுகள் நடப்பது வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையா? அல்லது சுற்று சூழல் பிரச்சனையா? இரண்டும் அல்ல. லாப வெறிக்காக மக்கள் வாழ்வாதாரத்தை சூறையாடும் ஆளும் வர்க்கத்தின் கொள்கையின் நாச விளைவு.

அதேபோல என்எல்சி  நிறுவனம் நிலக்கரியை அகழ்ந்தெடுக்க நிலமெடுத்த கிராமங்களில் அம்மக்கள் நிலங்களை இழந்து, வாழந்த வீடுகளை இழந்து, வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டு சாலையில் நிற்கின்றனர். நில மெடுத்த குடும்பங்களை  சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்பு கொடுக்காமல் அவுட் சோர்சிங் முறையில் பல்லாயிரம் ஆட்களை அமர்த்தி லாபமீட்டி வருகிறது. பல்லாயிரம் ஏக்கர் நிலங்களில் தனது இரும்பு கால்களை பதித்து பல்லாயிரம் கோடி லாபமீட்டும் இந்நிறுவனம் அப்பகுதி மக்களுக்கு செய்யும் கைமாறு என்ன? தனது சமூக பொறுப்பு நிதியை (சிஎஸ்ஆர்) பிஜேபி ஆளும் மாநிலங்களுக்கும், கார்ப்ரேட் சாமியார்களுக்கும் மடைமாற்றம் செய்கிறது.   மற்றொரு பக்கம் மத்திய மாநில அரசுகளின் கார்ப்ரேட் ஆதரவு பொருளாதார நெருக்கடியால் விவசாயம் பாதிக்கப்பட்டு, உழுகுடி மக்கள் வேலை தேடி புலம் பெயர்வது பொதுவான இந்திய கதை யாகும். அதற்கு இம்மாவட்டம் மட்டும் விதிவிலக்காக முடியாது. கிராமங்களில் உள்ள நிலங்கள் ரியல் எஸ்டேட் முதலலைகளின் வேட்டை காடாக மாறிக்கொண்டிருக்கிறது. விளை நிலங்கள் பிளாட் போட்டு விற்பது அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. நிலங்களும், அதை பற்றி நின்ற மரங்களும் ஆயிரக்கணக்கில் அழிவது இயற்கை சமன்பாட்டை மாற்றம் செய்யும் காரணியாய் மாறுகிறது. ஆக காலநிலை மாற்றமும் வாழ்வாதார பாதிப்பின் இன்னொரு பக்கமே. வளர்ச்சி என்ற பெயரில்  நடக்கும் இந்த அநீதிகளை எதிர்த்து  மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகிறது. 2011 ஆண்டு முதல் கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்கம் என்ற அமை ப்பின் மூலம் இறால் பண்ணைகளை எதிர்த்து, கடலோர நிறுவனங்களால் பாதிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க போராடிக்கொண்டிருக்கிறது. செங்கொடியுடன் என்எல்சி-க்கு  நிலம் கொடுத்தோர் உரிமைகளுக்காக உறுதியுடன் போராடிக்கொண்டிருக்கிறது. மக்கள் வாழ்வா தாரத்தை காக்க தொடர் சபதம் எடுக்க வடலூரில் மாவட்ட மாநாடு கூடுகிறது.