குடியாத்தம், ஜூன் 17-
குடியாத்தம் அடுத்த கள்ளூர் ஜெமினி நகரை சேர்ந்தவர் ஜெயவேலு (30) ஆட்டோ ஓட்டுநர். இவர் குடியாத்தம் பேருந்து நிலையத்திலிருந்து பிச்சனூர் பகுதிக்கு பெண் ஒருவரை ஏற்றிச் சென்றார். அந்தப் பெண் பலமநேர் சாலை அரசமரம் அருகே இறங்கி சென்றள்ளார்.
ஜெயவேலு வேறு இடத்திற்கு சவாரிக்கு சென்றபோது, அந்தப் பெண் தனது செல்போன் மற்றும் பணப்பை தவறவிட்டு சென்றது தெரிந்தது. பின்னர், குடியாத்தம் நகர காவல்நிலையத்திற்கு சென்று அதனை ஒப்படைத்தார்.
பிறகு, செல்போன் மற்றும் பணத்தை தவறவிட்ட, பிச்சனூர் பகுதியை சேர்ந்த லாவண்யாவிடம் ஒப்படைத்தனர். பயணி தவறவிட்ட பொருட்களை திரும்ப ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை காவல்துறையினர் பாராட்டினர்.