ராணிப்பேட்டை, ஆக. 16-
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகா ஓச்சேரி அருகில் அமைந்துள்ளது கரிவேட்டு கிராமம். இங்கு சாட்டை அடிக்கும் வகுப்பைச் சார்ந்த சுமார் 65 குடும்பங்கள் அரசு கொடுத்த பட்டா இடத்தில் குடிசைகள் அமைத்து வசித்து வருகிறார்கள். இயற்கை உபாதைகளுக்கு ஒதுங்க கூட இடம் இல்லை.
இந்த நிலையில், அந்த இடத்தை தனியார் ஒருவர் ஆக்கிர மிப்பு செய்து வருகிறார். எனவே, ஆக்கிரமிப்பை அகற்றி அனைவருக்கும் சொந்தமாக வீடு கட்டித்தர வேண்டும் என்று சாட்டை அடிக்கும் சமூகத்தை சார்ந்த அந்த மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.