ழுப்புரம், ஜூன் 7-
மின்வாரியத்தில் ஓய்வுபெற்ற வர்களுக்கு வழங்கப்பட்டு வந்த குடும்ப ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் தொடரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாநில செயற்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் எஸ்.எஸ் சுப்பிர மணியன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் எஸ்.ெஜக தீசன், பொருளாளர் எ.பழனி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
தற்போது மின்வாரியம் கொடுத்து வரும் ஓய்வூதிய திட்ட நடைமுறை தொடர வேண்டும், இயலாத நிலையில் தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் எரிசக்தி துறையின் மூலம் ஓய்வூதிய திட்டம் தொடர வேண்டும்.
நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட பி பி 2 யை ரத்து செய்ய வேண்டும், முடக்கபட்டுள்ள குடும்ப ஓய்வூதி யத்தை மீண்டும் வழங்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், கார்ப்ஸ் பண்ட் நிதி திட்டத்தை முற்றி லும் கைவிடவேண்டும் என்று தீர்மானங்களை நிறைவேற்றப் பட்டன.