திருவள்ளூர், ஜன.17- திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கோங்கல்மேடு எஸ்.டி.காலனி யில் மலைக்குறவன் மற்றும் இருளர் பழங்குடி மக்கள் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். அன்றாடம் உணவிற்கே அல்லல்படும் மக்களுக்கு அடிப்படை தேவைகள் கூட இன்னும் கிடைக்க வில்லை. இங்கு வாழும் பழங்குடி இன மக்களுக்கு சுடுகாடு இல்லாத தால் சாலை ஓரங்களில் புதைத்து வரு கின்றனர். இதற்கு ஊரில் உள்ள ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதால், இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இத்தகைய நிலையை தவிர்க்கும் பொருட்டு கோங்கல்மேடு எஸ்.டி.காலனி மக்களுக்கு என நிரந்தரமான சுடுகாடு அமைத்துத்தர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வரு கின்றனர். இதனை தொடர்ந்து ஜன 7 அன்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் ஏ.வி.சண்முகம், கிளை நிர்வாகிகள் ரவி, மணி, சிபிஎம் கிளை செயலாளர் அ.ரவி ஆகியோர் பொன்னேரி கோட்டாட்சியர் மற்றும் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட பொன்னேரி கோட்டாட்சியர் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கும்மிடிப் பூண்டி வட்டாட்சியருக்கு உத்தர விட்டார். இதன் பெயரில் ஜன 8 அன்றே வருவாய்த்துறையினர் கோங்கல்மேடு பகுதிக்கு சென்று அரசுக்கு சொந்தமான இடத்தை தேர்வு செய்தனர். தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் எழுப்பி அந்த நிலத்திற்கான பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். பேருந்துகள் நிறுத்த வேண்டுகோள் பள்ளி மாணவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள் அன்றாட அத்தியாவசியத் தேவைகளுக்கும், மருத்துவ மனைக்கும் போக கோங்கல்மேடு வழியாக செல்லும் சென்னை-சத்தியவேடு செல்லும் அரசு பேருந்துகள், தனியார் பேருந்து கள் நின்று செல்ல ஏதுவாக பேருந்து நிழற்குடை அமைத்து, பேருந்துகள் நின்று செல்ல அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.