புதுச்சேரி, ஆக.31- மின்துறையை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி அகில இந்திய விவ சாயிகள் சங்கத்தின் சார்பில் புதுச்சேரி ஆட்சியர் அலு வலகம் நோக்கி ஊர்வலம் நடைபெற்றது விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்க வேண்டும், விவசாயிகள் பயன்படுத்தும் பம்ப்செட் மோட்டாருக்கு மின் மீட்டர் பொருத்துவதை கைவிட வேண்டும், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், காரைக் காலை சேர்ந்த 437 விவ சாயிகளுக்கு வழங்க வேண்டிய பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி பேட்டையன் சத்திரத்தில் உள்ள ஆட்சி யர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு புதுச்சேரி மாநிலத் தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் ஆர்.ராஜாங்கம் போரட்டத்தை வாழ்த்திப் பேசினார். சங்கத்தின் மாநிலச் செயலாளர் சங்கர், சிஐடியு செயலாளர் சீனு வாசன், விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் தமிழ்ச் செல்வன், நிர்வாகிகள் சதா சிவம், பத்மநாபன், முத்து, வடிவேல், முருகையன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கட லூர் சாலை ஏ.எப்டி மைதானத்தில் இருந்து விவசாயிகள் டிராக்டர்க ளுடன் ஊர்வலமாக வந்தனர். பின்னர் துணை ஆட்சியர் வினையராஜை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.