districts

img

மின்துறையை தனியார் மயமாக்க மண்ணாடிப்பட்டு மாநாடு எதிர்ப்பு

புதுச்சேரி, அக்.15- மின்துறை அரசின் கட்டுப் பாட்டில் தொடர வேண்டும் என்று சிபிஎம் மண்ணாடிப்பட்டு கொம்யூன் கமிட்டி 24வது மாநாடு புதுச்சேரி அரசை வலி யுறுத்தியுள்ளது. மாநாட்டில் கொடியை மூத்த உறுப்பினர் வடிவேல் ஏற்றி வைத்தார். தட்சாணமூர்த்தி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். விநாயகம் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சீனுவாசன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். கொம்யூன் கமிட்டி செயலாளர் அன்புமணி மாநாட்டு வேலை அறிக்கை சமர்ப்பித்தார். மாநிலக்குழு உறுப்பினர் வே.சங்கர் வரவு-செலவு அறிக்கை சமர்ப்பித்தார்.  மாநில செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், கொளஞ்சியப்பன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் நிறை உரையாற்றினார்.முன்ன தாக மாநாட்டையொட்டி செந்தொண்டர் பேரணி நடை பெற்றது. கொம்யூன் கமிட்டி தேர்வு 8 பேர் கொண்ட மண்ணாடிப்பட்டு கொம்யூன் கமிட்டியின் செயலாளராக இரகு.அன்புமணி தேர்வு செய்யப்பட்டார். தீர்மானம் 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் வேலை நாட்களை உயர்த்த வேண்டும். ரேசன் கடைகளை திறந்து அரிசி உள்ளிட்ட பொது விநியோக பொருட்களை வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு மானிய விலையில்  உரம் மற்றும் இடு பொருட்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.