விழுப்புரம், பிப்.3- அண்ணா நினைவு தினத்தையொட்டி, விழுப்பு ரம் ஆஞ்சநேய சுவாமி கோவிலில் இந்து சமய அற நிலையத்துறை சார்பில் பொது விருந்து நடை பெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பழனி கலந்து கொண்டு, பொது மக்களோடு மக்களாக அமர்ந்து உணவருந்தினார்.விழுப்புரம் நகர்மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, நகர்மன்றத் துணைத் தலைவர் சித்திக் அலி, விழுப்புரம் வட்டாட்சியர் கிருஷ்ணதாஸ், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் சிவலிங்கம், உதவி ஆணையர் சிவா கரன் உட்பட பலர் உடன் உணவருந்தினார்.