districts

சென்னை முக்கிய செய்திகள்

அணுசக்தி கழக ஆர்டரை பெற்ற கோவை நிறுவனம்

சென்னை, நவ. 11- பம்ப் மற்றும் வால்வுகள் உற்பத்தியில் இந்தியாவில் முன்னணி நிறுவனமாக திக ழும் கோவையை சேர்ந்த கேஎஸ்பி நிறுவனம் இந்திய  அணுசக்தி கழகத்தில் இருந்து இந்திய ரூபாயில்  551 மில்லியன் மதிப்பிலான ஆக்சிலரி பம்ப் தயாரிப்புக் கான ஆர்டரைப் பெற்றுள்ளது. இந்நிறுவனம் நடப்பு நிதி ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 3வது காலாண்டிற்கான நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில்  இந்த தகவல் தெரிவிக் கப்பட்டுள்ளது.மேலும் கடந்த ஆண்டின் இதே  காலாண்டுடன் ஒப்பிடுகை யில் இதன் விற்பனை மதிப்பானது 31 சதவீதம் வளர்ச்சி அடைந்து ரூ. 5,637  மில்லியனாக உள்ளது.  தற்போதைய 3 காலாண் டுகளின் ஒட்டுமொத்த விற்பனை மதிப்பு 27 சதவீதம் அதிகரித்துள்ளதாக நிறுவனத்தின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

புதிய விளம்பர பிரச்சாரம்

 சென்னை, நவ. 11- உலக அளவில் சிறந்த ஸ்மார்ட்போன் பிராண்டாக திகழும் விவோ நிறுவனம் ‘‘வீட்டிற்கு வரும் மகிழ்ச்சி’’ என்னும் தனது புதிய தீபா வளி விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.  எப்சிபி இந்தியா நிறுவனத்தால் தயாரிக்கப் பட்டுள்ள இந்த விளம்பரப் படம், பண்டிகையின் சிறப்பை நேர்த்தியாக விளக்கி இருப்பதோடு, நாம்  நமது குடும்பத்துடன் ஒற்று மையாக இருந்தால் உண்மையான மகிழ்ச்சி மலரும் என்பதை இதயப் பூர்வமாக வெளிப்படுத்தி உள்ளது. மேலும் துபாய்க்கு பணிக்கு சென்ற ஒருவர்  பண்டிகை நாளில் தனது  மகளை பார்க்க விரும்பும் போது விவோ ஸ்மார்ட் போன் அதற்கு பயன்படு கிறது. தொழில்நுட்பம் எப்படி குடும்பத்தில் பாசப் பிணைப்பை ஏற்படுத்த உதவு கிறது என்பதை விளக்கும் வகையிலும் இந்த விளம்ப ரம் அமைந்துள்ளது.

ஸ்கூட்டியில் வைத்த பணம் 2.60 லட்சம் திருட்டு
காஞ்சிபுரம், நவ. 11- காஞ்சிபுரம் மாவட்டம் திருபெரும்புதூர் அடுத்த பிள்ளைப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அருள் பிரகாஷ் (43).  இவர்  அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தேநீர் சப்ளை செய்து வரு கிறார். இந்நிலையில் இவர்  தனியார் வங்கியில் இருந்து  ரூ.2.60 லட்சம் பணத்தை எடுத்து தனது ஸ்கூட்டியின் இருக்கைக்கு அடியில்  வைத்துள்ளார். பின்னர் திருபெரும் புதூர் வட்டாட்சியர் அலு வலக வளாகத்தில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது வாகனத்தின் இருக்கை உடைக்கப்பட்டு அதில் இருந்த  ரூ.2.60 லட்சம் பணம் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஸ்ரீபெரும் புதூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

ஐதராபாத் பல்கலை., தேர்தலில்  எஸ்எப்ஐ கூட்டணி வெற்றி

ஐதராபாத், நவ.11- ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ) தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. சனிக்கிழமையன்று நடைபெற்ற மாணவர் சங்கத் தேர்தலில் ஏபிவிபியின் அச்சுறுத்தல்களை முறியடித்து எஸ்எப்ஐ-ஏஎஸ்ஏ-டிஎஸ்எப் கூட்டணி வெற்றி பெற்றது. ஆறு பொது இடங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் கூட்டணி வெற்றி பெற்றது. 471வாக்குகள் பெரும்பான்மையுடன் எஸ்எப்ஐயின் அதிக் அகமது தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவராக ஏஎஸ்ஏ-வின் ஜல்லி ஆகாஷ் (388), பொதுச் செயலாளராக ஏஎஸ்ஏ-வின் தீபக் குமார் ஆர்யா (388), இணைச் செயலாளராக டிஎஸ்எப்-ன்லவ்டி பால ஆஞ்சநேயலு (641), ஏஎஸ்ஏ-வின் சமீம் அக்தர் ஷேக் (452), கலாச்சாரச் செயலாளராக, எஸ்எப்ஐ-யின் அதுல் (236) விளை யாட்டு செயலாளராக வெற்றி பெற்றனர்.

தோல்வியை ருசிக்காமல்  காலடி வைக்குமா இந்தியா?

இந்தியாவில் நடைபெற்று வரும் 13-ஆவது சீசன் உலகக்கோப்பை தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தீபாவளி நாளான ஞாயிறன்று நடைபெறும்  45-ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இந்த ஆட்டம் எவ்வித பலனும் அளிக்கப்போவதில்லை. காரணம் போட்டியை நடத்தும் இந்திய அணி ஏற்கெனவே அரையிறுதிக்கு முன்னேறி விட்டது. நெதர்லாந்து அணி தொடரை விட்டு வெளியேறி விட்டது. இதனால் இந்த ஆட்டம் வெறும் சம்பிரதாயம்தான். இருந்தாலும் தோல்வியை சந்திக்காமல் வெற்றி நடை யோடு அரையிறுதியில் காலடி வைக்கும் முனைப்பில் இந்திய  அணியும், ஆறுதல் வெற்றியோடு தாய்நாடு திரும்பும்  முனைப்பில் நெதர்லாந்து அணியும் என இரு அணி களும் வெற்றியின் மீது குறியாக களமிறங்குவதால் இந்த  ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீப விழா முன்னேற்பாடு பணிகள் ஆய்வு

திருவண்ணாமலை, நவ. 11- சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலா ளர் க. மணிவாசன்,  திரு வண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் தீப விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ்,  காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், கோயில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவல் குழு தலைவர் ஜீவானந்தம் மற்றும் கோயில் பணியாளர்கள் உடனிருந்தனர்.