மின்சாரம் மற்றும் மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி புதனன்று (மே 24) தென்சென்னை மாவட்டத்தில், சென்னை மண்டலக்குழு பிரச்சாரம் மேற்கொண்டது. எம்.தனலட்சுமி தலைமையிலான இந்தக்குழுவில் மாநிலச் செயலாளர்கள் பா.பாலகிருஷ்ணன், சி.திருவேட்டை, மாவட்டச் செயலாளர்கள் சு.லெனின் சுந்தர் (வடசென்னை), பகத்சிங்தாஸ் (செங்கல்பட்டு), தமிழச்செல்வன் (விழுப்புரம்), சுந்தரபாண்டியன் (கள்ளக்குறிச்சி) உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக்குழுவின் பிரச்சாரத்தை எம்.ஜி.ஆர் நகரில் மாநில துணைத்தலைவர் இ.பொன்முடி தொடங்கி வைத்தார். மாவட்ட பொருளாளர் ஏ.நடராஜன் உள்ளிட்டோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்