விழுப்புரம், பிப்.25- திருமண வரவேற்பு நிகழ்ச்சி யில் மணமக்கள் உருவாக்கிய மின் நூல் இணைய தளம் அறிமுகம் செய்யப்பட்டது. தகவல் தொழில்நுட்ப ஊழியர்க ளான விழுப்புரம் மருதூரை சேர்ந்த க.சதீஷ்குமார், திண்டுக்கல்லை சேர்ந்த சே.ஐஸ்வர்யா ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி பிப் 24 அன்று விழுப்புரத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பி னர் டி.ரவீந்திரன், கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராம மூர்த்தி, கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.ராதாகிருஷ்ணன், பி.குமார், எஸ்.முத்துக்குமரன், ஜி.ராஜேந்தி ரன், ஆர்.மூர்த்தி,எஸ்.வேல்மா றன்,சே.அறிவழகன், ஆர்.டி.முருகன், காணை ஒன்றிய செய லாளர் பி.சிவராமன், கண்டாச்சிபுரம் வட்ட செயலாளர் எஸ்.கணபதி, கண்டமங்கலம் ஒன்றிய செயலாளர் உலகநாதன், நகர செயலாளர் என்.மேகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். முன்னதாக மக்களிடம் புத்தக வாசிப்பை அதிகரிக்கும் நோக்கில் மணமக்கள் க.சதீஷ் குமார் - செ.ஐஸ்வர்யா ஆகியோர் www.getmyebook.in என்ற மின் நூல் இணையதளத்தை உரு வாக்கினர். அதை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி தொடங்கி வைத்தார். இந்த இணையதள மின் நூல் மூலமாக 300க்கும் மேற்பட்ட புத்தகங் களை வாசிப்பாளர்கள் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் என மண மக்கள் தெரிவித்தனர்.