கும்பகோணம், ஜூலை 26 - தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே அணைக்கரை மதகு சாலை கிரா மத்தைச் சேர்ந்தவர்கள் ஆகாஷ் (24), மனோஜ் குமார் (23), அப்பு என்ற ராஜேஷ்குமார் (22), கொளஞ்சிநாதன் (34). இவர்கள் 4 பேரும் கடந்த ஜூலை 18 ஆம் தேதி இரவு 11 மணி யளவில் மதகுசாலை கொள்ளிடம் ஆற்றின் மணல் திட்டில் நின்றுகொண்டு மீன்பிடிக்கச் சென்றனர். நள்ளிரவு ஒரு மணியளவில் கொள் ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு வந்தது. இதனை எதிர்பார்க்காத 4 பேரும் தங்களி டமிருந்த செல்போனிலிருந்து காவல்துறை கட்டுப்பாட்டு அறை, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீய ணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். இருப்பினும் 4 பேரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் சென்ற போது கொளஞ்சிநாதன் மட்டும் நாணல் புதரில் சிக்கி தவித்து கொண்டிருந்தார். அவரை பத்திர மாக மீட்டு உயிருடன் கரை சேர்த்தனர். பின்னர் அவர் கும்பகோணம் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
மற்ற 3 பேரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இதையடுத்து ஜூலை 20 ஆம் தேதி மயிலாடுதுறை தாலுகா சிறுபுலியூர் கொள்ளிடம் கரையில் மனோஜ், ஆகா ஷின் உடல்கள் அடுத்தடுத்து கண்டெடுக்கப் பட்டன. இருவரது உடல்களையும் பந்த நல்லூர் போலீசார் கைப்பற்றி திருப்பனந் தாள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூராய்வு செய்து இரு வரின் உடல்களும் பெற்றோரிடம் ஒப்படைக் கப்பட்டது. இதைத் தொடர்ந்து ராஜேஷ்குமாரின் உடலை ஒரு வாரமாக தேடி வந்த நிலை யில், திங்களன்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா வடரங்கம் பகுதியில் தீய ணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு படை யினர் கண்டெடுத்தனர். சீர்காழி அரசு மருத் துவமனை மருத்துவர்கள் வடரங்கம் கொள்ளிட கரையிலேயே ராஜேஷின் உடலை கூராய்வு செய்து கொடுத்தனர். அதன் பிறகு மதகு சாலை கொண்டு வரப்பட்டு பெற் றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்வில் திருவிடைமருதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அரசு தலைமை கொறடாவுமான கோவிசெழி யன், சீர்காழி தொகுதி எம்எல்ஏ பன்னீர் செல்வம், திருப்பனந்தாள் ஒன்றிய துணைத் தலைவர் அண்ணாதுரை, சீர்காழி, திரு விடைமருதூர் டிஎஸ்பிக்கள் பழனிசாமி, வெற்றிவேந்தன் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.