புதுச்சேரி மின் துறையை தனியார் மயமாக்கும் ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கையை எதிர்த்து மின்துறை ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக, முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு கொடுப்பதற்காக உப்பளம் மின்துறை தலைமை அலுவலகத்திலிருந்து சட்ட மன்றம் நோக்கி ஊர்வலம் நடத்தினர்.