கிருஷ்ணகிரி,ஜூலை.14-
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பிஎம்சி டெக் குழுமம் இணைந்து நடத்தும் 12 வது ஓசூர் புத்தகத் திருவிழா ஹோட்டல் ஹில்ஸ் வளாகத்தில் இன்று துவங்கியது.
தலைவர் அறம் கிருஷ்ணன் வர வேற்றார்.மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு தலைமை தாங்கினார். உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி 120 அரங்குகள் கொண்ட புத்தகத்திருவிழாவையும், விற்பனையையும் துவக்கி வைத்தார். ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ்,மாநகர மேயர் எஸ்.ஏ. சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, சாராட்சியர் சரண்யா,ஆணையர் சினேகா,மாவட்ட வரு வாய் அலுவலர் ராஜேஸ்வரி புத்தக அரங்கு களை திறந்து வைத்தனர். பிஎம்சி டெக் கல்வி நிறுவனங்களின் தலைவர் பெ.குமார்,18 வது வார்டு உறுப்பினர் ஏர் பைபர் நிர்வாக இயக்கு னர் சசி தேவ்,ஹோட்டல் ஹில்ஸ் சிஇஓ அழகரசு, புத்தகத் திருவிழா பொரு ளாளர் கண்மணி, துணை தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.
புத்தகத் திருவிழா மதிப்புறு தலைவர் முனைவர் வணங்காமுடி தொடக்க உரை யாற்றினார். ஒருங்கிணைப்பாளர் முனைவர் சேதுராமன் அறிமுக உரையாற்றினார்.மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் மோகன் நிகழ்ச்சியை தொகுத்தார். முன்னதாக ஓசூர் வட்டத்தில் புத்தகத் திருவிழா பிரச்சாரம் செய்த புதுக்குரல் கலைக்குழுவின் தப்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சி நடைபெற்றது. செயலாளர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.