districts

img

மதுராந்தகம் வட்டக்கிளை செயற்குழு உறுப்பினர் தவில் ஆதி காலமானார்

மதுராந்தகம்,ஆக.17-  

      தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மதுராந்தகம் வட்டக்கிளை செயற்குழு உறுப்பினர் தவில் ஆதி (வயது60) வியாழனன்று (ஆக17) காலமானார்.  செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் வாழ்ந்து வந்த ஆதி கேசவன் என்ற தவில் ஆதி உடல் நலக்குறைவால் காலமானார்

     தமுஎகச, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு கலைக் குழுக்களின் சார்பிலும் சென்னை பாரதியார் கலைக் குழுவின் சார்பிலும் இடதுசாரி கருத்துக்களை தவில் இசை மூலம் கொண்டு சென்றவர். அன்னாரது இறுதி ஊர்வலம் மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட கடப்பேரியில் அவரது இல்லத்தில் நடைபெற்றது. அவரது உடலுக்கு தமுஎகச மாவட்ட நிர்வாகிகள் இ.சங்கரதாஸ்,  கவி சேகர், என்.டி.ரங்கநாதன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.