districts

img

அரசு கலைக் கல்லூரி துவங்க வேண்டும் தண்டராம்பட்டு மாநாடு கோரிக்கை

திருவண்ணாமலை,அக். 24– திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகாவில் அரசு கலைக் கல்லூரி, அரசு தொழிற் பயிற்சி நிலையம் அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வட்டமாநாடு வலி யுறுத்தியுள்ளது. கட்சியின் தண்டராம்பட்டு வட்டார 3ஆவது மாநாடு வியாழனன்று (அக்.24) தானிப்பாடியில் நடைபெற்றது.  ஏ.கோவிந்தராஜ்  வரவேற்றார். கே.தணிகாசலம் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். சார வள்ளி, ரவி, அந்தோணிசாமி ஆகியோர்  தலைமை தாங்கி னர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.பாரி துவக்கி வைத்தார். வேலை அறிக்கையை வட்டார செயலாளர் இரா.அண்ணா மலை  சமர்ப்பித்தார்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.செல்வன் வாழ்த்திப் பேசினார்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.லட்சு மணன்  நிறைவுரையாற்றினார். கே.வேலு  நன்றி கூறினார்.முன்னதாக தானிப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலம் புறப்பட்டது.  புதிய வட்டக்குழு 8 பேர் கொண்ட வட்டக்குழுவின் செயலாளராக ஏ.சக்தி வேல் தேர்வு செய்யப்பட்டார். தீர்மானங்கள் தண்டராம்பட்டு தாலுகாவில் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம், நீதிமன்ற வளாகம் ஆகிய கட்டமைப்பு களை உருவாக்க வேண்டும், தானிப்பாடி, சாத்தனூர், தண்டராம்பட்டு பகுதிகளை பேரூராட்சியாக மாற்ற வேண்டும், சாத்தனூர், தானிப்பாடி பகுதியில் நேரடி கொள்முதல் நிலையங்கள் துவக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.