districts

img

தச்சூர் - சித்தூர் தேசிய நெடுஞ்சாலை திட்டம் ஆட்சியர் உத்தரவை அமலக்க மறுக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகள்

திருவள்ளூர், ஜூலை 1-

     தச்சூர் முதல் சித்தூர்  வரை தேசிய நெடுஞ் சாலைக்காக மாவட்ட ஆட்சி யரின் உத்தரவை அமலாக்க தவறும்  இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகளின் அலட்சிய போக்கைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வெள்ளியன்று (ஜூன் 30) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    திருவள்ளூரில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.சம்பத் தலைமை தாங்கினார்.மாநில செயலாளர் பி.துளசி நாராயணன், மாவட்டத் துணைத் தலைவர் பெ.இரவி,  மாவட்டக் குழு உறுப்பினர் கள் மாரிமுத்து, விஸ்வநா தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முறையாக என்ஏஎச்ஏஐ அதிகாரிகள் அளவீடு செய்யாமல் நிலங்களை கையகப்படுத்தும் போக்கை  கைவிட வேண்டும்.

    விவசாய நிலத்தில் உரிய இழப்பீடு தொகையை விவசாயிகளுக்கு தரா மலேயே நிலத்திற்குள் அத்துமீறி  நுழைவதை கைவிட வேண்டும், மின்  இணைப்பை மாற்ற மின்சார துறை அதிகாரிகள் தேவை யின்றி அலைக்கழிப்பதை தடுக்க வேண்டும்,  

    கொடி, மரம், செடிக ளுக்கு இழப்பீடு தொகையை நிர்ணயிக்க வேண்டும்,  வீட்டிற்கான முதல் தவணையை தந்த 20 நாட்களிலேயே வீட்டை இடிக்க வருவதை தடுக்க வேண்டும், சர்வீஸ் சாலை அமைக்க  வேண்டும், ஆழ்துளை கிணறு, பைப் லைன், வீடு, மரங்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.  

  பின்னர் அதிகாரிகளை  சந்தித்து சங்கநிர்வாகி கள் மனு அளித்தனர். கோரிக்கைகள்   தொடர்பாக  உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அது வரை  பட்டா நிலங்களில் பணிகள்  துவங்கக் கூட்டாது என்ற  விவசாயிகளின் கோரிக் கையை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர்.