ராணிப்பேட்டை, நவ. 23- ராணிப்பேட்டை மாவட்டம், கலவை தாலுகா மேல் நெல்லி கிராமத்தில் ஏரி கரையோரத்தில் சிலர் கொட்டகை அமைத்துள்ளனர். இந்த தகவலை அறிந்த வருவாய் துறையினர் வட்டாட்சியர் இந்துமதி தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று கொட்டகையை அகற்ற முயன்றனர். அப்போது பொதுமக்களுக்கும் வருவாய் என துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரய்யா, துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு, ஆய்வாளர் காண்டீபன் ஆகியோர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 15 நாட்களுக்குள் பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, கூடாரங்களை அகற்றினர்.