குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தில் ஒப்பந்த அடிப்டையில் பணிபுரியும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பெரம்பூர் எம்கேபி நகர் சென்ட்ரல் அவென்யூவில் உள்ள பொறியாளர் அலுவலகம் முன் துவங்கிய சைக்கிள் பிரச்சாரத்தை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வடசென்னை மாவட்டத் தலைவர் எம்.ராஜ்குமார் துவக்கி வைத்தார். இதில் சிஐடியு நிர்வாகிகள் ஏ.பிரகாஷ், கே.பாலசுப்ரமணியம், எம்.கோவிந்தன், கே.பழனி, எஸ்.அகிலன், கே.பிரகாஷ், எம் பழனி, ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பெருநகர சென்னை மாநகராட்சி எம்.சி.ரோடு வணிக வளாக சிறுகடைகள் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வியாபாரிகளுக்கு காலண்டர் மற்றும் பிளாஸ்க் பரிசாக வழங்கப்பட்டது. இதில் சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.கே.மகேந்திரன், மாவட்ட செயலாளர் ஆர்.ஜெயராமன், விற்பனையாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் டி.வெங்கட், சிபிஎம் பகுதி செயலாளர் எஸ்.பவானி, எம்.சி.ரோடு வணிகவளாக வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் கே.செல்வானந்தன், செயலாளர் எஸ்.காசிம், செயல் தலைவர் கே.பலராமன், பொருளாளர் பாலையா, நிர்வாகிகள் மாரி, ராஜகுரு, விஜய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.