districts

ஆக.15ல் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் ஆட்சியர் உத்தரவு

ராணிப்பேட்டை,ஆக.13-

     சுதந்திர தினங்களில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபானக் கடைகளை ஓட்டி உள்ள மதுக் கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் செவ்வாயன்று (ஆக. 15) மூடப்பட்டு இருக்க வேண்டும். அன்றைய தினங்களில் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது என மாவட்ட ஆட்சியர்  ச.வளர்மதி தெரிவித்துள்ளார்.