districts

சென்னை முக்கிய செய்திகள்

காஞ்சிபுரம்: ஒரே மாதத்தில் ரூ. 15.5லட்சம் அபராதம் வசூல்

காஞ்சிபுரம், டிச.3- காஞ்சிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் கா.பன்னீர்செல்வம் தீவிர வாகன தணிக்கை செய்து கடந்த நவம்பர் மாதம் மட்டும் ரூ. 15,47,700 அபரா தம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளார். காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலு வலக மோட்டார் வாகன ஆய்வாளர் கா.பன்னீர் செல்வம் நவம்பர் மாதம் காஞ்சிபுரம், வாலாஜபாத் மற்றும் உத்திரமேரூர் பகுதி களில் சுமார் ஆயிரம் வாக னங்களை ஆய்வு செய்து 114 வாகங்களுக்கு 6,42,300 ஸ்பாட் பைன் முறையில் உடனடி இணக்கக்கட்டணம் வசூல் மற்றும் ரூ. 9,05,400 இதர அலுவலக வாக னங்களுக்கு இணக்கக்கட்ட ணம் நிர்ணயம் என மொத்தம் 15,47,700 அப ராதம் விதித்து நடவடிக்கை எடுத்தார்.

புயல் எதிரொலி: பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்

சென்னை, டிச. 3- புயல் மற்றும் மழையை எதிர்கொள்ளும் வகையில் பழமையான கட்டிடங்களில் வசிப்பவர்கள் நிவாரண முகாம் அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மிக்ஜம் புயல் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தொடர்ந்து தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், படிப்படியாக மழை அதிகரித்து திங்கட்கிழமை இரவு வரை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை பெருநகர காவல் துறை எல்லையில் பழமையான கட்டிடங்களில் உள்ள குடியிருப்புகளை காவல் துறையினர் பட்டியலிட்டு வருகின்றனர். இதில் சென்னை பாரிமுனை, மண்ணடி, முத்தையால்பேட்டை, ஏழுகிணறு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேல் உள்ள 28 பழமையான கட்டிடங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  கட்டடங்களின் தன்மையை மாநகராட்சி அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து அங்கு வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு வருகிறது.  அங்கு வசிக்கும் குடியிருப்பு வாசிகள் அதிக கனமழையால் பாதிப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டால் அரசின் தற்காலிக முகாம்களில் தங்கிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புயல் எதிரொலி: 4 மாவட்டங்களில்  டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

சென்னை,டிச.3- மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், 4 மாவட்டங்களுக்கும் திங்களன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவை வழங்கும் நிறுவனங்கள்  மட்டும் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.

காலமானார்

கடலூர், டிச.3- தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக கடலூர் மாவட்டத் தலைவர் எம்.ரமேஷ் தாயார் எம்.பட்டு அம்மாள் (வயது.72)  சனிக்கிழமை காலமானார்.  புதுப்பாளையம் அவரது இல்லத்தில் ஞாயிறு கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட  செயலாளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழுஉறுப்பினர் வி.சுப்பராயன், மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், மாற்று திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.ஆளவந்தார், மாநகர செயலாளர் கனகராஜ், சிபிஎம் மாநகரக் குழு உறுப்பினர் பூபதி, கிளைச் செயலாளர்கள் சீனி, சரவணன், ரமேஷ் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொருளாளர் அன்பழகன் தொலைபேசி மூலம் ஆறுதல் தெரி வித்தார்.

வாடிக்கையாளர்களுக்கு  முன்னுரிமை விற்பனை

சென்னை,டிச,3 சென்னை, டிச. 3, 2023: உயர் செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போன் பிராண்டாக திகழும் க்யூஓஓ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு முதல் முறையாக பிரத்யேக முன்னுரிமை பாஸை அறிவித்துள்ளது. இதன்படி தற்போது இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஐக்யூஓஓ 12 ஸ்மார்ட்போனை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் இந்த பாசை பெறுவதன் மூலம் ஸ்மார்ட்போன் விற்பனைதுவங்குவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாகவே ஐக்யூஓஓ 12 ஸ்மார்ட்போனை வாங்க முடியும். அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 10 லட்சத்திற்கும் அதிகமானவாடிக்கையாளர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விற்பனையானது வரும் 5-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை அமேசான்.இன் மற்றும்ஐக்யூஓஓ.காம் ஆகிய ஆன்லைன் தளங்களில் நடைபெற உள்ளது.

சனிக்கிழமை அட்டவனைப்படி இன்று மெட்ரோ ரயில் இயக்கம் 

சென்னை,டிச.3-  மிக்ஜம் புயல் காரணமாக திங்கள்கிழமை (டிச.4) ஒருநாள் மட்டும் சனிக்கிழமை நேர அட்டவணையின் படி ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், புயல் காரணமாக தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்ததை தொடர்ந்து, சென்னை மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை நேர அட்டவணையின் படி இயக்கப்படும். காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். காலை 5 மணி முதல் 8 மணி வரை, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.