districts

img

அடிப்படை வசதிகள் கேட்டு சாமிப்பிள்ளை தோட்டத்தில் தர்ணா

புதுச்சேரி,டிச.21- சாமிப்பிள்ளை தொட்டத்தில் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்ககோரி தர்ணா போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்கு உட்பட்ட சாமிப்பிள்ளை தோட்டம் பகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். அப்பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீர்செய்ய வேண்டும். மின்துறையை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும். அரசு அறிவித்த மழைகால நிவாரணம் ரூ.5ஆயிரத்தை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா நடைபெற்றது. புதுச்சேரி கருவடிக்குப்பம்  ஈ.சி.ஆர் சாலை சந்திப்பில் நடைபெற்ற இந்த தர்ணாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உழவர்கரை நகரக்குழு உறுப்பினர் மணிமாறன் தலைமை தாங்கினார்.பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம், உழவர்கரை கொம்யூன் செயலாளர் ஆர்.எம்.ராம்ஜி, செயற்குழு உறுப்பினர் சத்தியா, நகரக்குழு உறுப்பினர்கள் பாஸ்கர், சுரேஷ் மற்றும் பலர் பங்கேற்றனர்.