districts

img

முகச்சிதைவால் பாதிக்கப்பட்ட டான்யா குணமடைந்தார்

ஆவடி,செப்.6- ஆவடியில் அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டான்யாவுக்கு சிகிச்சை முடிந்தது. மேலும் வரும் வெள்ளிக் கிழமை வீடு திரும்பு கிறார். ஆவடியை சேர்ந்த சிறுமி டான்யா அரியவகை முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். முதல்வரின் முயற்சியால் சிறுமிக்கு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து, சிகிச்சை முடிந்து சிறுமி டான்யாவுக்கு முகம் சீரமைக்கப்பட்டது. இதையடுத்து அவள் பூரண குணமடைந்து வருவதால் வரும் வெள்ளிக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தினமும் டான்யாவின் உடல் நலம் குறித்து தன்னிடம் கேட்டு வருவதாக அமைச்சர் நாசர் சிறுமியிடம் கூறினார்.

;