districts

img

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் என்ற நடைமுறையை முற்றிலும் கைவிடவேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் சாரங்கபாணி தலைமையில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிறுத்தம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் மாநில செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட நிர்வாகிகள்  சந்திரபாபு, புஷ்பவல்லி,  நாகராஜன், பாலசுப்பிரமணியன், பால், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பூங்குழலி, செயலாளர் செல்வம் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.