தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பெரணமல்லூர் கிளை துணைத்தலைவர் இரா.ராஜசேகரன் தலைமையில் உலகப் புத்தக தின விழா கொண்டாடப்பட்டது. இதில் பலவகை நூல்கள் 50 விழுக்காடு கழிவு விலையில் விற்பனை செய்யப்பட்டன. இதில் கிளைச் செயலாளர் மா.கௌதம் முத்து, கவிஞர் பி.மாலவன், எழுத்தாளர் பெரணமல்லூர் சேகரன், பாடகர் ஏ.கதிரவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.