மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி கடைகளின் வாடகை நிலுவைக்கு அபராத தண்ட வட்டி விதிப்பதை தவிர்க்க வேண்டும், ஊட்டி - குன்னூர் புதிய வாடகை வசூலிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நகராட்சி இயக்குனர் பொன்னையாவை சந்தித்து மனு அளித்தார். மாநில தலைமைச் செயலாளர் ஆர்.ராஜ்குமார் உடன் இருந்தார்.