காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தலைவர் கே.செந்தில் முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் பிரபாகர், இணைச்செயலாளர் இந்திரகுமார், வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் மத்திய செயற்குழு உறுப்பினர் ஆர்.பாலசுப்பிரமணியன், அரசு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் எல்.ஆனந்தகிருஷ்ணன், செயலாளர் கே.மகாலிங்கம், சாலைப்பணியாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.சாமிதுரை, ஊராட்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட துணைத் தலைவர் டி.வீரபுத்திரன், மாவட்ட பொருளாளர் டி.சக்திவேல்முருகன் ஆகியோர் பேசினர்.