பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் செல்வகுமார் துவக்கி வைத்தும், ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன் நிறைவு செய்தும் பேசினர்.