2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வு நிலுவையை, நீதிமன்ற தீர்ப்பின்படி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் கடலூர், திருவண்ணாமலை, வேலூரில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.