தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கத்தின் பொன்விழா ஆண்டு நிறைவையொட்டி புதனன்று (செப்.20) சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு ரத்த தானம் செய்து முகாமை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து நுட்பனர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.செல்வகுமார், பொதுச்செயலாளர் வி.பார்த்தசாரதி உள்ளிட்டு சங்க நிர்வாகிகள் ரத்ததானம் செய்தனர்.